search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் தற்கொலை"

    • வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வி.கோட்டா அருகே உள்ள ஜிவனி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. ஆட்டோ டிரைவர். இவருக்கும் ராம தீர்த்தம் பகுதியை சேர்ந்த சின்னப்பா மகள் அருணா (வயது 30) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    தம்பதிக்கு ஹரிஷ் (12), ஜித்தின் (9) என 2 மகன்கள் இருந்தனர். வெங்கட்ரமணாவின் தம்பி மனைவி காயத்ரி. நிலப் பிரச்சனை சம்பந்தமாக அருணாவுக்கும், காயத்ரிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதுகுறித்து அருணா தனது கணவரிடம் தெரிவித்த போது அவர் ஏதும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

    நேற்று காலை அருணாவுக்கும், காயத்ரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணா தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் இருவரையும் தள்ளிவிட்டு தானும் குதித்தார்.

    மாலை வீட்டிற்கு வந்த வெங்கட்ரமணா மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வெங்கட்ரமணா மற்றும் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது அங்குள்ள கிணற்றின் கரை மீது நித்தின் அணிந்திருந்த செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கட்ரமணா உறவினர்கள் கிணற்றில் குதித்து அருணா மற்றும் அவரது பிள்ளைகளில் உடல்களை தேடினர்.

    இதுகுறித்து வி.கோட்டா தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக தாய் 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
    • வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கிளிஞ்சல் மேடு, சுனாமி குடியிருப்பு மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(வயது 62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வடிவேல், ஆட்சியம்மாள் 2 மகன்களின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி மகன் தீபமணியை வடிவேல்ஆட்சியம்மாள் சிறு வயது முதல் வளர்த்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களாக, தீபமணி, மியான்மர் உள்நாடு கலவரத்தில் சிக்கி தவித்து வருகிறார். இது குறித்து, தீபமணியை மீட்டு தருமாறு காரைக்கால் மாவட்ட கலெட்கரிடம் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், தீபமணி பற்றி கவலையில் இருந்துவந்த ஆட்சியம்மாள், தீபமணியை இனி எப்போது பார்ப்பேன் என புலம்பி வந்துள்ளார். தொடர்ந்து, வழக்கம் போல், வீட்டு மாடியில் தூங்கசென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை, ஆட்சியம்மாள் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரம் அறிந்து, அனைவரும் சென்றுபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார்.
    • மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும், குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி (24). இவரது கணவர் நவீன்குமார் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கணவர் நவீன் குமார் குடிபோதையில் மனைவி சிவசங்கரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார். இதில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சிவசங்கரியையும், குழந்தையையும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும் குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் தாய் சிவசங்கரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
    • செந்திலுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை மல்லிசெட்டி தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 50), இவரது மனைவி சுஜாதா (47). இவர்களது 17 வயது மகள் சேலம் கோட்டையில உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர்.

    அப்போது அவர் படிக்கும் பள்ளி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதும், அவருடன் சிறுமி மாயமானதும், தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா செய்வதறியாது திகைத்தார்.

    பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சாப்பாட்டில் கலந்து கணவர் செந்திலுக்கு கொடுத்தார். தொடர்ந்து அவரும் அந்த உணவை சாப்பிட்டார்.

    இதில் மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் சுஜாதா உயிரிழந்தார்.

    செந்திலுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாயமான சிறுமி உள்பட 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி காந்திமதி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர். கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் அவர் இருந்தார். நேற்று இரவு வீட்டில் குழந்ைதகள் கண்அயர்ந்து தூங்கினர். அப்போது காந்திமதி திடீர் வீட்டினை உள்புறமாக பூட்டினார். பின்னர் கயிறால் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    காலையில் எழுந்து பார்த்த குழந்தைகள் காந்திமதி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து காந்திமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் சுப்ரமணியம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    • லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு அடுத்த திகுவபல்லியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). தம்பதியின் மகன் பரமேஸ்வர ரெட்டி (4), மகள் மோஷிதா (2).

    இவர்கள் மதனப்பள்ளி அடுத்த குர்ரம் கொண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    சுப்ரமணியம் ரெட்டி அங்குள்ள மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியம்ரெட்டி நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இங்கிருந்து வரமாட்டேன் என்கிறாய் என லாவண்யாவை சரமாரியாக தாக்கினார்.

    இதையடுத்து லாவண்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பூதலப்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறால் லாவண்யா மனம் உடைந்தார். நேற்று தனது குழந்தைகளுடன் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து உயிருக்கு போராடினார்.

    கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அப்பகுதி மக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    இது குறித்து குர்ரம் கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறை பிரசவத்தில் பிறந்த 2 குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • 2 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி. பஞ்சு மில் தொழிலாளி. இவரது மனைவி சரளா (வயது 28). இவர்களுக்கு 7 வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் ஆனார். கடந்த மாதம் பேறுகாலத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்தார். சரளாவிற்கு பேறு காலத்திற்கு முன்னதாகவே இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.

    குறை பிரசவத்தில் பிறந்த 2 குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரளா தனது குடும்ப உறவினர்களிடம் குழந்தைகளின் நிலையை பார்க்கும்போது இறந்து விடலாம் போல் உள்ளதாக வேதனையுடன் கூறிவந்துள்ளார்.

    சரளாவின் கணவர் சபரி நேற்று இரவு தனது மாமனார் வீட்டுக்கு வந்தார். அவரிடம் சரளா இதுபற்றி கூறி புலம்பியுள்ளார். சபரி மனைவி சரளாவுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இன்று அதிகாலை சரளா தனது குழந்தைகளுடன் படுக்கையில் இல்லாததை அறிந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சரளா அருகில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரளாவை மீட்டனர். பின்னர் அவரை உடனடியாக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது சரளா பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

    இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு வந்த அவரது கணவரும் அழுது புரண்டது காண்போர் கண்களை குளமாக்கியது. சரளாவின் இரட்டை குழந்தைகளை கிணற்றுப் பகுதியில் தேடினர்.

    இதுபற்றி எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சரளாவின் குழந்தைகளை தேடி வருகின்றனர். 2 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
    • இது குறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (72). இவரது மகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த சின்னம்மாள் கடந்த 23-ந் தேதி அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி குள்ளனூரில் வசிக்கும் தனது மகள் ஜோதிலட்சுமி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சின்னம்மாள் கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லாமல் இருந்தது ஜோதிலட்சுமிக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து ஜோதிலட்சுமி சின்னம்மாளை தேடி வந்த நிலையில் பூதப்பாடி அருகே உள்ள வாய்க்கால் கரையில் சின்னம்மாள் மாத்திரை சாப்பிட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன் நேரில் சென்று பார்த்த போது மாத்திரை சாப்பிட்டு கிடந்தது தெரியவந்தது.

    உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மகன் தமிழரசன் என்பவர் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    • மகன் இறந்த துக்கத்தில் தூக்குபோட்டு தாயம்மாள் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே அஞ்செட்டி போலீஸ் சரகம் வண்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி தாயம்மாள்.

    இவர்களது மகன் தமிழரசன் என்பவர் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போதிலிருந்தே தாயம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    கடந்த 17-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத பொது தாயம்மாள் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயம்மாள் உயிரிழந்தார்.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள நரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரதியான்(32). இவருக்கும், ஓசூர் காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா என்பவர் மகள் நாகவேணி(29) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 

    இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிகிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையெடுத்து கடந்த 20-ம் தேதி காலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த நாகவேணி, பாகலூர்-பேரிகை ரோட்டில் உள்ள சுப்பிரமணி விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார், நாகவேணியின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×